*வணக்கம் வருகைக்கு நன்றி*

Dec 21, 2012

நல்லாருக்கு, ஆனா செக்சியா இல்ல

கடந்த ஞாயிற்று கிழமை இரவு தில்லியில் நடந்த பலாத்கார நிகழ்வையும் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையையும் பலரும் அறிந்திருப்பீர்கள்.இதற்கு வட மாநிலங்களில் ஆங்காங்கே எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்டங்கள் நடந்தது.பார்லிமென்டிலும் எதிரொலித்தது.ஒரே நிகழ்விற்கு அனைத்து தரப்பு கோணங்களையும் செய்தியாக தரும் 24 மணி நேர செய்தி மீடியாக்கலும் அடுத்த செய்திக்கு சென்று விடும்.இதற்கு யார் காரணம் என்ன காரணம் எது எப்படி இருந்தாலும் பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கும் பெண்களை மதிப்பவர்களுக்கும் வேதனை தந்திருக்கும்.அனைத்து பெண்களுக்கும் மெல்லிய பயம் வந்திருக்கலாம்.ஃபேஸ் புக்கில் படித்ததை இங்கு காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

The bus driver ram singh went out with his 6 friends ( 2 rkp sabzee wale ) the girl and the guy was called by the driver and were given proper tickets ( the bus was a school bus with black curtains .. Not permitted for transport use )

the girl was 23 a very good student and wanted to reach dwarka mor.After they got in , the guys hit a rod on the guys's head and threw him out , then raped the girl one by one which was moving continuously in the posh areas of delhi and ncr.

The girl's vagina + small and large intestine is totally damaged and she cannot live a married or normal life.

After raping her badly , one of them inserted a very long rod in her vagina which almost killed her and threw her out and ran away.She was lying in the middle of the road hurt and nude..Not even single person helped her or covered her for an hour.When police came in no one helped them pick her up. They were just not interested at all.Doctor said " main bayan nahi kar sakta ki ussne kya kya zheela hai ... Bolte hue muzhe dard hota hai ".She has gone in coma 5 times from 16th dec. She is unconscious , critical and is not stop crying. The ribs are damaged as well.That's the whole story And that's what delhi people are. And her only fault was that she took a wrong bus..

இனி சில நிகழ்வுகளையும்,கேள்விப்பட்டவைகளையும் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த     பதிவிற்கு வரும் பின்னூட்டங்களுக்கு  நன்றியோ,பதிலோ தெரிவிக்க விருப்பமில்லை.பதிவை படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை நாகரீகமாக பகிர்தலே நன்றியாக இருக்கும்.இந்த பலாத்கார சம்பவம் பார்லிமெண்ட் வரை பேசப்பட்டாலும் எங்கள் குடியிருப்பு பகுதியில் பேசிக்கொள்வது ” இந்த மாதிரி சம்பவங்கள் தினமும் எங்கேயாவது நடந்துகொண்டுதான் இருக்கிறது.பாதிக்கப்பட்டது மருத்துவ மாணவி என்பதாலும் பேருந்தில் கொடூரமாக நிகழ்ந்ததாலும் பார்லிமெண்ட் வரை போய்விட்டது,பார்லிமெண்ட் கூடும் நாட்களைவிட,நாட்டில் நடைபெறும் கொலை கொள்ளைகளைவிட  கற்பை இழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகம்.அன்பு,காதல் என்ற  பேரில் ஏமாற்றப்படும் பெண்களும் இங்கு அதிகம்” என்கிறார்கள்.தில்லியில் சில நிகழ்வுகளை பகிர்ன்றேன்.ஆண் பெண் நட்பு,காதல் அவர்களுக்குள் எந்தளவிற்கு உள்ளதோ,எப்படிப்பட்டதோ நமக்குத் தெரியாது. பொது இடங்களில் சிலர் நடந்துகொள்வதை பார்க்கும்போது நாம்தான் தூரப்போக வேண்டியுள்ளது.இது எங்கும் பொருந்தும் என்றாலும் பல பெண்களின் ஆடை நாகரீகம் பெண்களையே ஆச்சரியத்தில் பார்க்க வைக்கிறது.

தில்லியில் சரோஜினி நகர் மார்க்கெட்டில்,ஒரு கடையில் குர்தாக்களை பார்த்து செலெக்ட் செய்துகொண்டிருந்தோம். என் அருகே இளம் பெண்கள் சிலரும் மினி  டாப்ஸ்களை செலக்ட் செய்துகொண்டிருந்தனர்.அவர்கள் செலக்ட் செய்ததை நான் பார்க்கவில்லை,ஆனால் அதில் ஒரு பெண் சொன்னது : ஹே! யே தோ சுந்தர் ஹே(இது அழகாக இருக்கிறது) . மற்றொரு பெண்: சுந்தர் தோ ஹே! லேகின் பெஹனே தோ செக்ஸி நஹி ஹோத்தி ஹே,(அழகாதான் இருக்கு ஆனால் அணிந்தால் செக்சியாக இருக்காது)

இந்த தேர்வை என்னவென்று சொல்லலாம்.தைத்து விற்பவனின் தவறா ?, அணிந்து கொள்பவர்களின் தவறா?இப்படியான உடைகளை நிச்சியம் வீட்டிற்குள் அணிந்து கொள்ளவா வாங்குகின்றனர். இவர்களின்  வீட்டு நபர்கள் எப்படி எடுத்துக்கொள்கின்றார்கள்.இந்த கேள்விகளை அந்த பெண்ணிடம் கேக்க முடியாமல் இங்கு பதிகின்றேன்.மாடர்னாக காமிக்க  உடை உடுத்துவது இப்போ செக்சியாக காமித்துக்கொள்ளும் அளவிற்கு வந்துள்ளதே,இம்மாதிரியான பெண்களினால் ஏக்கத்தில் பாதிக்கப்பட்டவன்தான் கிடைக்கும் பெண்ணை சீரழிக்கின்றான்.

அதே சரோஜினி நகர் மார்க்கெட்டில் ஒரு முறை பர்சேசுக்கு வந்த பெண்ணிடம் ஒருவன் தவறாக அழைக்க, அந்த பெண் கூச்சலிட வந்த போலிசும் பெண்ணை சமாதனப்படுத்தியதே தவிர அவனை கண்டித்து கூட அனுப்பவில்லை.  ஒரு நாள் மெட்ரோவில்  ஸ்டேசனில் இறங்கி லிஃப்ட்க்கு காத்திருந்தோம்.சில நிமிடங்களில் லிஃப்ட் வந்தது.உள்ளிருந்து வந்தவர்களில் ஒரு ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாக காட்சி தந்தனர். அவர்களின் (காமம்)நெருக்கம் சுற்றி நிற்பவர்களை பொருட்படுத்தவில்லை.பார்ப்பவர்களும் பொருட்படுத்தவில்லை. என் மகள் அவர்களை கவனிப்பதைக் கண்டு மகளை அதட்டினேன்.அந்த ஆண் எங்களை முறைக்க பார்க்கிறான், என் மகள் அந்த ஆண்ட்டி ட்ரசில் போட்டிருக்கும் பர்பிடால் பொம்மைய பாரும்மா என்றாள். என்னத்த சொல்றதுன்னு தலையில் அடித்துக்காத குறைதான்.லிஃப்ட் தளத்திற்கு வந்தவுடன் அந்த ஜோடி குழைய,குழைய சென்றதுன்னுதான் சொல்ல முடியும்.


அரை குறை ஆடையில் பல பேருக்கு முன் நடிக்க வரும் நடிகைகள் கூட பட பிடிப்பு தளத்தில் கேமிறாவிற்கு முன்னால் வருவதற்கு முன் மேலே போர்த்தி வருகிறார்கள்,பிறகு பலருக்கு முன் நடிக்கிறார்கள்.அதற்கு பின் அவர்களின் நடிப்பை உலகத்தில் யார் வேணும்னாலும் பார்க்கிறார்கள்.ஆனால் இங்கு தெருக்களிலும்,பொது இடங்களிலும் நேரடி காட்சியாக அரை குறை ஆடை அணிந்த பல நங்கைகளும்,கவர் செய்திருந்தாலும் மேலே சொன்னது போல செக்சியான தோற்றத்தில் நகர் வலம் வருவதை பார்க்க முடிகிறது.இதே பெண்கள் தங்கள் உறவினர்களில் பெரியவர்களை வழியிலோ வீட்டிலோ பார்த்த மாத்திரத்தில் காலைத் தொட்டு வணங்குவதையும் பார்க்கலாம்.ஆனால் அவர்களது அம்மாக்கள் தங்களது சில உறவுகள் வந்துவிட்டால் தலையில் முந்தானை தலைப்பை முக்காடாக மூடிக்கொண்டு பணிகள் செய்வதையும் பார்க்க முடியும்.குளிர் காலங்களில் மட்டும்தான் பெரும்பாலான பெண்கள் முழு ஆடைகளில் காட்சி தருகின்றனர்.


உன் மனைவி அழகாக இருக்கிறாள் என்று பிறர் சொல்ல கேட்கும் எந்த ஒரு ஆணும் காம்ப்ளிமெண்ட் சொல்பவரைப் பொறுத்து சந்தோசப்படுவார்கள்.ஆனால் உன் மனைவி செக்சியாக இருக்கிறாள்னு சொன்னால் சொன்னவன் யாரா இருந்தாலும் செருப்பால அடிக்கத் தோணுமா இல்லையா?ஆனால் யுவர் ஒய்ஃப் ஈஸ் சோ செக்சின்னு பிறர் சொல்வதில் பெருமை அடையும் ஆண்களும் இங்கு உண்டு.அப்படிபட்ட குடும்பத்தில் பிறந்த,3 ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளை விளையாடும்போது சக தோழியின் மேலாடையை தொப்பிள் தெரிய உசத்தி நடந்து வர சொல்லுதாம்,டான்ஸ் ஆட சொல்லுதாம்.பெத்தவங்ககிட்ட கம்ப்ளைண்ட் கொடுத்தால் பிள்ளையின் அறிவாற்றல் பெருமையில் சிரித்துகொள்கிறாங்களாம்.இந்த கொடுமைய எங்க போய் சொல்றது……..


சில பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளில் பெண்களின் ஆபாச படம் போட்டு கால் மீ என்று நம்பர் எதாவது  போடப்பட்டுள்ளது.செல்போன்களுக்கு ஆபாச படம்,புகைப்படங்களுக்கான லின்க்குகள் மெஸேஜ் ஆக வருகிறது.எதாவது நம்பரில் மிஸ்டு கால் வருகிறது.ஆர்வத்தில் அதே நம்பருக்கு அழைத்தால் ஆணும் பெண்ணும் டேட்&டைம் பற்றி பேசும் ரெக்காடட் வாய்ஸ் கேக்கிறது.ஐஎஸ்டி ரேட்டில் பேலன்ஸ் கட்டாகிறது.ஆபாச படங்களை ஆண் பெண் நட்புகள் இணைந்து பார்க்கின்றார்கள்.உப்பு,பருப்பு கடன் வாங்குவது போல ஆணுறை கடன் கேட்கப்படும் கன்றாவிகளும் நடக்கிறது.


தில்லி ரயில்வே ஸ்டேசனில் (பல பெண்களின் குடியை கெடுக்க )சிவப்பு விளக்கு பகுதி பெண்கள் தேசியக்கொடியை கையில் வைத்துக்கொண்டு ஆள் பிடிக்கிறார்கள்.கூவி,கூவி கூப்பிடாத குறைதான்.அந்த தேசியக்கொடியை வேணாம்னு சொல்வதற்கு கூட இது வரை எந்த ஆண்கள் சங்கம்,பெண்கள் சங்கம் போராட்டம் செய்ததாக தெரியவில்லை.பதிவு நீள்வதால் இத்துடன் நிறைவு செய்கின்றேன்.தலைநகரில் பல நல்லவைகள் நடந்தாலும் இதுபோன்று பலவைகளும் நிகழ்கின்றது.பெண்களே எவ்வளவு திறமையுடன் புரட்சிகரமாக இருந்தாலும்,பெண்மை கற்பு விசியத்தில் பாதிப்பு பெண்களுக்கு மட்டும்தான் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.கீழே விழுந்தாலும் மீசையில் மண்  ஒட்டலைன்னு சொல்வதை விட நாகரீகப் போர்வையை அவசியத்திற்கு தகுந்தவாறு தீர்மானிப்பது நலமாயிருக்கும்.
மீண்டும் சந்திப்போம்.....

Dec 8, 2012

முப்பருவங்களும் உன் பிறப்பினிலே

உன்  முகத்தைப்  பார்க்கும் 
ஆவலில் மாதங்கள் மட்டுமல்ல 
நொடிகளும் பஞ்சுகளாய் 
பறந்தது.சுமந்த உணர்வுகளை 
உரு பெற்ற உந்தன் அசைவுகளை 
என் வயிற்றிலிருந்து மடிக்கு 
வந்தவுடன் அனைத்தையும்
எழுத்தாக்கிட நினைத்த நான் 
மணற் கேணியானேன்.

விழித்திருக்கும் வினாடிகளை 
வீணடிக்காத  உந்தன் செல்ல 
முயற்சிகளின் அழகை சேகரிப்பதில் 
தோற்றுப்போகிறேன்.
உனக்கு நிகரான உதாரணங்களை 
வார்த்தைகளை எங்கே தேடுவேன்,
பார்ப்பதும் ,சிரிப்பதும்,சினுங்குவதும்
உறங்குவதும்,நெளிவதும்,துள்ளுவதும்  
நான் பெற்ற கவிதையே நீதானே!

எனது குழந்தைப்  பருவமும்
எனது தாயிடத்தில் இப்படித்தான் 
இருந்திருக்குமென்று எண்ணுகையில் 
திளைப்பினிலே குழந்தைக்கு
இணையாகின்றேன். .


Friends18.com Orkut Scraps